உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் பறவை மோதியதால் அவசரசமாக தரையிறக்கப்பட்டது. நேற்று வாரணாசிக்கு சென்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேம்பாடு பணிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், வாரணாசியில் இருந்து காலை ஹெலிகாப்டர் மூலம் லக்னோவுக்கு புறப்பட்டார். அப்பொழுது அவரது ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் சாலை மார்க்கமாக வாரணாசியில் இருந்து விமான நிலையத்திற்கு சென்றார்.