தற்போதைய செய்திகள்

மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

தந்தி டிவி

தமிழ்நாடு மகளிர் காவலர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நீண்ட தூர பாய்மர படகு பயணத்தை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல் துறையில் பெண் காவலர்களின் 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை, சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவினை பாய்மரப் படகு மூலம் கடக்கும் கடல் பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் சேகர்பாபு, டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆகியோர் உடனிருந்தனர். பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பாலநாகதேவி பவானீஸ்வரி, மகேஸ்வரி, நிஷா ஆகியோர் தலைமையில் 30 காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்