தற்போதைய செய்திகள்

நைசாக வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்து நகைகள், பணங்களை திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த உரிமையாளர்..!

தந்தி டிவி

அந்தியூர், பேட்டை பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் பூபதி. தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இவர், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால், எழுந்து சென்று பார்த்த பூபதி, வீட்டினுள் புகுந்த பெண் ஒருவர் பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டிருப்பதை கண்ட நிலையில், கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். விசாரணையில், கைது செய்யப்பட்ட பெண் மீனவர் மாரியம்மாள் கோவில் வீதியை சேர்ந்த சுமதி என்பதும், வீட்டினுள் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து சவரன் நகைகளை திருடியதும் தெரியவந்தது. சுமதியிடம் இருந்து திருடிய பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்