தற்போதைய செய்திகள்

நைசாக வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்து நகைகள், பணங்களை திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த உரிமையாளர்..!

தந்தி டிவி

அந்தியூர், பேட்டை பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் பூபதி. தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இவர், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால், எழுந்து சென்று பார்த்த பூபதி, வீட்டினுள் புகுந்த பெண் ஒருவர் பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டிருப்பதை கண்ட நிலையில், கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். விசாரணையில், கைது செய்யப்பட்ட பெண் மீனவர் மாரியம்மாள் கோவில் வீதியை சேர்ந்த சுமதி என்பதும், வீட்டினுள் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து சவரன் நகைகளை திருடியதும் தெரியவந்தது. சுமதியிடம் இருந்து திருடிய பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை