தற்போதைய செய்திகள்

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு- ஜிப்மர் மருத்துவமனைக்கு... மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி

புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி, கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு கர்ப்பப் பையில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டி அகற்றப்பட்டது. அங்கு அவருக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உடல்நிலை மோசமாகி, கடந்த 2016-ஆம் ஆண்டு, ராஜராஜேஸ்வரி உயிரிழந்தார். இதுதொடர்பாக, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராஜராஜேஸ்வரியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரை விசாரித்த ஆணையம், அறுவை சிகிச்சை செய்த மகளிர் மருத்துவ நிபுணரும், ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகமும், ராஜராஜேஸ்வரியின் பெற்றோருக்கு 22 லட்சத்து 94 ஆயிரத்து 986 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்