தற்போதைய செய்திகள்

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு- ஜிப்மர் மருத்துவமனைக்கு... மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி

புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி, கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு கர்ப்பப் பையில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டி அகற்றப்பட்டது. அங்கு அவருக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உடல்நிலை மோசமாகி, கடந்த 2016-ஆம் ஆண்டு, ராஜராஜேஸ்வரி உயிரிழந்தார். இதுதொடர்பாக, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராஜராஜேஸ்வரியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரை விசாரித்த ஆணையம், அறுவை சிகிச்சை செய்த மகளிர் மருத்துவ நிபுணரும், ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகமும், ராஜராஜேஸ்வரியின் பெற்றோருக்கு 22 லட்சத்து 94 ஆயிரத்து 986 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்