தற்போதைய செய்திகள்

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு- ஜிப்மர் மருத்துவமனைக்கு... மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி

புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி, கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு கர்ப்பப் பையில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டி அகற்றப்பட்டது. அங்கு அவருக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உடல்நிலை மோசமாகி, கடந்த 2016-ஆம் ஆண்டு, ராஜராஜேஸ்வரி உயிரிழந்தார். இதுதொடர்பாக, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராஜராஜேஸ்வரியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரை விசாரித்த ஆணையம், அறுவை சிகிச்சை செய்த மகளிர் மருத்துவ நிபுணரும், ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகமும், ராஜராஜேஸ்வரியின் பெற்றோருக்கு 22 லட்சத்து 94 ஆயிரத்து 986 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை