தற்போதைய செய்திகள்

பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அலேக்காக தூக்கி சென்ற பெண் - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் உறங்கிய 4 மாத பச்சிளங்குழந்தை கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலையத்தில் முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 4 மாத ஆண் குழந்தையுடன் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் மனைவி, குழந்தையுடன் உறங்கிய அவர், அதிகாலையில் கண் விழித்த போது குழந்தையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி இருந்தது. இதனையடுத்து அப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு