தற்போதைய செய்திகள்

பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அலேக்காக தூக்கி சென்ற பெண் - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் உறங்கிய 4 மாத பச்சிளங்குழந்தை கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலையத்தில் முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 4 மாத ஆண் குழந்தையுடன் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் மனைவி, குழந்தையுடன் உறங்கிய அவர், அதிகாலையில் கண் விழித்த போது குழந்தையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி இருந்தது. இதனையடுத்து அப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை