தற்போதைய செய்திகள்

சாப்பிடும்போது புரையேறி பெண் மரணம்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி

தந்தி டிவி

தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், சாப்பிடும்போது புரையேறி மயங்கி விழுந்து, பெண் தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி நயினார்புரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மனைவி கற்பகவல்லி, தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் பணிக்குச் சென்ற அவர், உணவு இடைவேளையின்போது சக தொழிலாளர்களுடன் உணவு சாப்பிடும்போது, புரை ஏறி மயக்கம் அடைந்தார். அவரை உடனிருந்தவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்