தற்போதைய செய்திகள்

சாப்பிடும்போது புரையேறி பெண் மரணம்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி

தந்தி டிவி

தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், சாப்பிடும்போது புரையேறி மயங்கி விழுந்து, பெண் தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி நயினார்புரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மனைவி கற்பகவல்லி, தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் பணிக்குச் சென்ற அவர், உணவு இடைவேளையின்போது சக தொழிலாளர்களுடன் உணவு சாப்பிடும்போது, புரை ஏறி மயக்கம் அடைந்தார். அவரை உடனிருந்தவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை