தற்போதைய செய்திகள்

கிரிப்டோ கரன்சி என ஆசை வார்த்தை...சொந்த வீட்டை விற்ற நபர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சென்னையில் கிர்ப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து பொது மக்களிடம் கைவரிசை காட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை எண்ணூரை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏரையூரில் உள்ள வீட்டை 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில், பணம் முழுவதையும் அதே ஊரை சேர்ந்த ஜான் ரோசாரியோ என்பவர் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். சில மாதங்கள் கழித்து கிரிப்டோ கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாததால் அதிர்ச்சியடைந்த கொளஞ்சியப்பன், இது குறித்து ஜான் ரோசாரியோவிடம் கேட்டிருக்கிறார். அப்போது, முறையாக பதிலளிக்காத ஜான் ரோசாரியோ தனது கூட்டாளிகளான மரியா சூசை மற்றும் தனசேகர் மூலம் கொளஞ்சியப்பனை மிரட்டிய நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு, கிரிப்டோ கரன்சியின் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக வட்டி பெறலாம் என பொதுமக்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்ததாகவும், முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கூறி கைவரிசை காட்டியது தெரியவர, மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்