போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் ரத்த தான முகாமை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிரந்தர பணியாளர்கள் பணிக்கு எடுத்தப்பின் ஒப்பந்த பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறினார். அரசு போக்குவரத்து கழகத்திற்கு 4,200 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.