தற்போதைய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை கிடைக்குமா?

தந்தி டிவி

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இது அரசின் வருவாய் தொடர்புடைய கொள்கை சார்ந்த விவகாரம் என தெரிவித்தது. எனவே, மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை வழங்குவதை முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு தான் என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி