தற்போதைய செய்திகள்

வீட்டை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானைகள்..! உயிரை கையில் பிடித்து கதறிய தாய், மகன் - கூடலூர் அருகே அதிர்ச்சி

தந்தி டிவி

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இந்நிலையில், உணவைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன. கூடலூரை அடுத்துள்ள ஓவேலி, காமராஜ் நகர் பகுதியில், நேற்று ஒருவரது வீட்டை யானை உடைத்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதி​யில் சந்திரசேகரன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த காட்டு யானைகள், வீட்டின் ஒரு பகுதியை உடைத்ததுடன், பொருட்களையும் சேதப்படுத்தின. வேறொரு அறையில் சந்திரசேகர் மற்றும் அவரது தாயார் பதுங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீட்டிலிருந்த சமையல் பொருட்கள், பீரோ, கட்டில் போன்றவற்றை சேதப்படுத்திய யானைக்கூட்டம், 2 மணி நேரத்திற்குப் பின்னர் வனப்பகுதிக்குச் சென்றது. குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு