தற்போதைய செய்திகள்

யானையை முதலில் கட்டுவது யார்..? கொலையில் முடிந்த தகராறு... மூணாறு அருகே அதிர்ச்சி சம்பவம்...

தந்தி டிவி

கேரளாவில் யானை சவாரி மையத்தில் 2 பாகன்களுக்கு ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூணாறு அருகே தனியாருக்கு சொந்தமான யானை சவாரி மையம் செயல்பட்டு வருகிறது.

இதில் பாகன்களாக பணிபுரிந்து வரும் விமல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்குமிடையே யானையை கட்டுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விமலை தாக்கியுள்ளார்.

இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மணிகண்டனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்