தற்போதைய செய்திகள்

சைலேந்திரபாபு இடத்திற்கு வர போவது யார்?

தந்தி டிவி

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நாளை (22.6.23) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு , உள்துறைச் செயலாளர் அமுதா மற்றும் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். புதிய டிஜிபிக்கான பரிந்துரை பட்டியல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தின் இறுதியில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இறுதி செய்து தமிழ்நாடு அரசிடம் பட்டியலை ஒப்படைக்கும். இதிலிருந்து ஒருவரை தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக காவல் துறையில் தற்போது 12 பேர் டிஜிபிக்களாக உள்ளனர்.தமிழக கேடர் அதிகாரியான சஞ்சய் அரோரா, அயல்பணியில் டெல்லி காவல் ஆணையராக உள்ளார். சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால், டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, காவல்துறை பயிற்சி அகாடமி இயக்குனராக உள்ள டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், மத்திய அயல்பணியில் உள்ள ராஜீவ் குமார், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அபய்குமார் சிங், டிஜிபி வன்னிப் பெருமாள் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’