தற்போதைய செய்திகள்

"யார கேட்டுங்க இத பண்ணீங்க"போலீஸ் மீதான கடும் கோபத்தில் - ரயிலை மறித்த மக்கள்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

வியாசர்பாடி பகுதியில் தண்டவாளத்தின் குறுக்கே செல்வதற்கு வழி கேட்டு, பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதி மக்கள், வியாசர்பாடி பகுதிக்கு செல்வதற்கு ரயில்வே தண்டவாளத்தை தாண்டி சென்று வந்தனர். இந்தநிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அந்த வழியை, போலீசார் அடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அரக்கோணம் நோக்கி சென்ற ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், பொதுமக்கள் குறிப்பிட்ட பகுதியில் மேம்பாலம் கட்டி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்