தற்போதைய செய்திகள்

திகார் சிறையில் மணிஷ் சிசோடியாவுக்கு என்னென்ன சலுகைகள்?

தந்தி டிவி

மதுபான கொள்கை முறைகேடு புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுபான கொள்கை முறைகேடு புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த 27-ஆம் தேதி கைது செய்தது. 7 நாள் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் கே நாத்பால் முன் சிசோடியாவை மீண்டும் ஆஜர்படுத்தியது. விசாரணையில், இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக சிபிஐ தரப்பில் வாதிட்டப்பட்டு, நீதிமன்ற காவலில் வைத்திருக்கவும் கோரப்பட்டது.இதற்கு சிசோடியாவின் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற டெல்லி சிபிஐ நீதிமன்றம், சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல் விதித்தது. திகார் சிறையில் நாட்குறிப்பு, பேனா, பகவத் கீதை, மூக்கு கண்ணாடி, மருந்து பொருட்கள் ஆகியவற்றை வழங்கவும் அனுமதியளித்தது. மணீஷ் சிசோடியாவை தியான சிறைக்கூடத்தில் வைத்திருக்கவும் சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்