தற்போதைய செய்திகள்

'நாங்க குடிச்சே ஆகணும்...' மின் கம்பி திருடி, ஜெயில் கம்பி எண்ணும் இருவர்..!

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம நாகர்பாளையம் பகுதியில் அலுமினியம் மின் கம்பிகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின் பாதை பராமரிப்பு பணிக்காக, நாகர்பாளையம் பகுதியில், மின் ஊழியர்கள் அலுமினிய மின் கம்பிகளை வைத்து இருந்தனர்.

இந்நிலையில், மது அருந்துவதற்காக ரகுநாதன் மற்றும் நாகராஜ் என்ற இருவர் கம்பிகளை திருடியுள்ளனர்.

ஆனால், இருவரையும் கையும் களவுமாக பிடித்த மின்வாரிய அதிகாரிகள், கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குபதிந்த போலீசார் சிறை​யில் அடைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை