தற்போதைய செய்திகள்

ஆசிரமத்தில் காணாமல் போன 15 முதியவர்கள்.. போலீசார் நடத்திய சோதனையில் அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

விழுப்புரம் அருகேயுள்ள தனியார் ஆசிரமத்தில், பலர் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் ஆசிரமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே திருப்பூரை சேர்ந்த சலீம்கான் என்பவர், தனது மாமனார் ஜபருல்லாவை, இந்த ஆசிரமத்தில் கடந்த 2021ம் ஆண்டு சேர்த்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஜபருல்லா காணாமல்போனதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சலீம்கான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆசிரமத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்ததும்,15க்கும் மேற்பட்ட முதியவர்கள் காணாமல்போய் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஆசிரமத்தில் இறந்தவர்கள் குறித்த ஆவணங்களும் முறையாக பராமரிக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு