தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் அதி பயங்கரம்.. சூப்பர் மார்கெட்டில் இருவருக்கு கத்திக்குத்து.. ஒருவர் பலி - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இப்ராஹீம் என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். • உடல் நிலை சரியில்லாமல் கடைக்கு செல்லாத நிலையில், நேற்று மளிகை பொருள்கள் வாங்க தான் பணிபுரியம் கடைக்கு சென்றுள்ளார். • அப்போது ஒரு பெண்ணிடம், இரண்டு இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். • இதனை பார்த்த இப்ராஹீம் மற்றும் தீபக் ஆகிய இருவர், அந்த இளைஞர்களிடம் தட்டி கேட்டுள்ளனர். • இதில், ஆத்திரமடைந்த இளைஞர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளனர். • இதில், இப்ராஹீம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்த நிலையில், தீபக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். • இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து, கொலையில் ஈடுபட்ட ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரை கைது செய்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்