தற்போதைய செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை - சிக்கிய கடிதம் - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மன உளைச்சலில் கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்த சுவாதி பிரகாஷ் மணப்பாறை அருகே உள்ள தாதனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர், அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்த நிலையில், சக கிராம நிர்வாக அலுவலர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும், அவர் செல்போனை எடுக்காததால், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் வீட்டிற்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுவாதி பிரகாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

பின்னர், சடலத்தை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை