தற்போதைய செய்திகள்

பட்டாக்கத்தி மூலம் பிறந்தநாள் கேக்கை வெட்டிய ரவுடி - அண்ணன் மகனை மடியில் வைத்து வீடியோ

தந்தி டிவி

காரைக்குடியில் பட்டாக்கத்தியை குழந்தையின் கையில் கொடுத்து, பிறந்தநாள் கேக்கை வெட்ட வைத்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யாநகரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அண்ணன் மகன் பிறந்தநாள் விழாவில், அஜித்குமார் தனது மடியில் குழந்தையை அமரவைத்து, பட்டாக்கத்தி மூலம் பிறந்தநாள் கேக்கை வெட்ட வைத்தார். இந்த வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அஜித்குமாரை காரைக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்