தற்போதைய செய்திகள்

"நேர்மையாக வேலை செய்ய முடியல" பணியை துச்சமென உதறி தள்ளிய VAO - தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்..!

தந்தி டிவி

தனது பணியை நேர்மையாக செய்ய முடியவில்லை என அருப்புக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி, விரக்தியில் ராஜினாமா செய்துள்ள சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கள்ளக்காரி என்ற கிராமத்தில், விஏஓ-வாக பணிபுரிந்து வருபவர் பிரித்திவிராஜ். சமூக சேவகரான இவர், கடந்த 2019ம் ஆண்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி கிராம நிர்வாக அதிகாரி என பட்டம் பெற்றவர். இந்த நிலையில், விஏஓ பணியை தொடர முடியவில்லை என, தனது மேல் அதிகாரியிடம் பிரித்திவிராஜ் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். 13 வருடங்களாக ஒரு நேர்மையான அரசு அதிகாரி சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் மற்றும் அரசியல்வாதிகளால் பல்வேறு அழுத்தங்களை சந்தித்துள்ளதாகவும், விஏஓ பணியில் மாற்றத்தை தன்னால் கொண்டு வர முடியவில்லை எனவு​ம் கூறி, விரக்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"