தற்போதைய செய்திகள்

வைகாசி விசாகத் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு ஆராதனை

தந்தி டிவி

வைகாசி விசாகத் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு ஆராதனை வைகாசி விகாசத்தை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள பிரசித்திபெற்ற முருகன் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மேளதாளத்துடன் பெண்கள் காவடி ஏந்தியும், சிறுமிகள் பால்குடத்தை தலையில் சுமந்தும் ஊர்வலமாகச் சென்றனர்.கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள், பால்குடங்கள் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு