தற்போதைய செய்திகள்

வைகாசி விசாகத் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு ஆராதனை

தந்தி டிவி

வைகாசி விசாகத் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு ஆராதனை வைகாசி விகாசத்தை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள பிரசித்திபெற்ற முருகன் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மேளதாளத்துடன் பெண்கள் காவடி ஏந்தியும், சிறுமிகள் பால்குடத்தை தலையில் சுமந்தும் ஊர்வலமாகச் சென்றனர்.கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள், பால்குடங்கள் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை