தற்போதைய செய்திகள்

வைகாசி விசாகத் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு ஆராதனை

தந்தி டிவி

வைகாசி விசாகத் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு ஆராதனை வைகாசி விகாசத்தை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள பிரசித்திபெற்ற முருகன் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மேளதாளத்துடன் பெண்கள் காவடி ஏந்தியும், சிறுமிகள் பால்குடத்தை தலையில் சுமந்தும் ஊர்வலமாகச் சென்றனர்.கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள், பால்குடங்கள் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்