தற்போதைய செய்திகள்

"சனாதன தர்மத்தில் தீண்டாமைக்கு இடமில்லை" ஆளுநர் ஆர்.என்.ரவி

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சனாதனத்தால் உருவான நாடு பாரதம் என்றும், சிலர் அறியாமையின் காரணமாக சனாதனத்தில் தீண்டாமை உள்ளதாக தவறாக பிரசாரம் செய்கின்றனர் என்றும் கூறினார். அனைவரும் சமம் என்பதை சனாதனம் வலியுறுத்துவதாகக் கூறிய அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே சனாதனத்தின் அடிப்படைதான் என்றார். நாடு முழுவதும் சனாதனம் நிலைபெற்று இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்