தற்போதைய செய்திகள்

சாலையில் கிடந்த மர்ம பார்சல்...போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்

தந்தி டிவி

சாலையோரம் கிடந்த மர்ம பார்சலை மீட்ட தூய்மைப் பணியாளர்கள், அதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பழவந்தாங்கல் சிக்னல் அருகே கிடந்த பார்சல் ஒன்றை அப்பகுதியில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் மீட்டு தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

பார்சலுக்கு உரிமைக் கோரி யாரும் வராத நிலையில், அதனை மீனம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பார்சலைப் பெற்றுக் கொண்ட போலீசார் அதனை சோதனை செய்ததில், அதில் குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இதனிடையே சாலையோரம் கிடந்த பார்சலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு