தற்போதைய செய்திகள்

சாலையில் கிடந்த மர்ம பார்சல்...போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்

தந்தி டிவி

சாலையோரம் கிடந்த மர்ம பார்சலை மீட்ட தூய்மைப் பணியாளர்கள், அதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பழவந்தாங்கல் சிக்னல் அருகே கிடந்த பார்சல் ஒன்றை அப்பகுதியில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் மீட்டு தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

பார்சலுக்கு உரிமைக் கோரி யாரும் வராத நிலையில், அதனை மீனம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பார்சலைப் பெற்றுக் கொண்ட போலீசார் அதனை சோதனை செய்ததில், அதில் குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இதனிடையே சாலையோரம் கிடந்த பார்சலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா