தற்போதைய செய்திகள்

உச்சக்கட்ட தீண்டாமை! - "உங்களுக்கெல்லாம் எதுவும் தர முடியாது" - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

பட்டுக்கோட்டை அருகே இரட்டை குவளை நடைமுறையில் இருப்பதாக கூறி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிளாமங்கலம் கிராமத்தில் இரட்டை குவளை நடைமுறையில் உள்ளதாகவும், முடி திருத்தும் கடைகளில் ஒருதரப்பினருக்கு முடி திருத்தம் செய்யக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, தீண்டாமையை கடைபிடிக்கமாட்டோம் என ஒரு தரப்பினரிடம் எழுத்து பூர்வமாக உறுதி தெரிவித்தனர்.

இதனால், அந்த கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் சூழல் உருவாகியுள்ளதால் டிஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஊரில் உள்ள மளிகை கடையில் ஒருவர் பெட்ரோல் கேட்க, அதை தரக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு உள்ளதாக அவர் சொல்வது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தீண்டாமை குறித்த சர்ச்சையை மட்டுமல்லாமல் மளிகை கடையில் பெட்ரோல் விற்கப்படுவது குறித்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு