தற்போதைய செய்திகள்

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம் 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், யுகேஜி பள்ளி மாணவியரிடம் பாலியல் பலாத்காரம் ஈடுபட்ட சம்பவம் வெளியான விவகாரத்தில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, தனியார் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான காமராஜ், தனது மனைவி பிரபாவதி தாளாளராக பணியாற்றும் கெங்கை சூடாமணியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் யுகேஜி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தாளாளர் பிரபாவதி மற்றும் அவரது கணவர் காமராஜ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"