தற்போதைய செய்திகள்

ரகசியமாக விற்கப்பட்ட TMT கம்பிகள்.. ரூ.800 கோடி மதிப்பிலான வரி மோசடி - சிக்கிய 3 பேர் நிர்வாகிகள்

தந்தி டிவி
• சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய் மோசடி செய்த டி.எம்.டி. கம்பி நிறுவனங்களின் 3 நிர்வாகிகளை ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். • டி.எம்.டி. கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர். • முதற்கட்ட விசாரணையில், முறையான ரசீது இல்லாமல் ரகசியமான முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு, டி.எம்.டி. கம்பிகளை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. • மேலும் சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை நடந்ததும், 150 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது. • இதுதவிர ரகசியமான இடத்தில் குடோன் வைத்து டி.எம்.டி கம்பிகளை விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, ஜி.எஸ்.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக