தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறிப்பு... காட்டிகொடுத்த சிக்னல் - வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்

தந்தி டிவி

அருமனை அருகே செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் பரிமளம். இவர் அதே பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் பணி புரிந்து வரும் நிலையில், இவரிடம் இரு இளைஞர்கள் சாலையில் செல்லும் போது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை தேடி வந்த போலீசார், கேரளாவை சேர்ந்த அபின்ராய் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், உயர் ரக செல்போனை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையில் செல்போனை திருடியதாக இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை