தற்போதைய செய்திகள்

ஜோ பைடனை கொல்ல முயற்சி? பாதுகாப்பில் வளையத்தில் White House - கைப்பற்ற பட்ட நாஜிக்களின் கொடி... அமெரிக்காவில் அதிர்ச்சி

தந்தி டிவி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, கொல்ல முயன்றதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அநாஜிக்களின் கொடி திர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் லாரி ஒன்று தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, லபாயெட் சதுக்க பகுதியில் உள்ள சாலை மற்றும் நடைபாதையை அதிகாரிகள் மூடினர். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெம்லி கூறினார். விபத்து பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. 

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு