தற்போதைய செய்திகள்

நம்பிய நகை கடைக்காரர்... கண்ணிமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய இளைஞர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

ஓசூர் அருகே, நகை வாங்குவது போல் நடித்து, ஒரு லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள செயின்களை எடுத்துச் சென்று ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் உள்ள நகைக்கடைக்கு சென்ற இளைஞர் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து, நகைகளை காட்ட சொல்லி உள்ளார். அதனை நம்பிய கடை உரிமையாளரும், நகைகளை ஒவ்வொன்றாக காட்டி கொண்டிருந்த போது, அந்த இளைஞர் திடீரென 3 தங்க செயின்களை எடுத்துக்கொண்டு ஓட்டம்பிடித்தார். இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான நிலையில், நகைகளை திருடி சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்