தற்போதைய செய்திகள்

"எங்க பாட்டன் கத்து கொடுத்தது இதுதான்...பிள்ளைகளுக்கு படிப்பு கொடுக்க நினைக்கிறோம்.." - 13 ஆண்டுகளாக போராடும் பழங்குடியின மக்கள்

தந்தி டிவி
• உரிய சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாததால், தங்களின் வாழ்க்கை தரம் உயராமல் இருப்பதாக, பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்... • திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மோரை ஜெ.ஜெ.நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். • சாட்டை அடித்தபடி யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவரும் இவர்கள், சாதி சான்றிதழ் கிடைக்காததால் பிள்ளைகளை படிக்கவைக்க முடியாத சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். • ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மட்டும் வழங்கியுள்ள அரசு, மற்ற தேவைகளையும் பூர்த்திச் செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கும் பழங்குடியின மக்கள், குழந்தைகளுக்கு பிறப்பு சான்று இல்லாததால், ஆதார் அட்டை பெறமுடியாத சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். • சாட்டை அடி தொழிலுக்கு குழந்தைகளை அழைத்து சென்றதால், கடந்த மாதம் 6 வயது சிறுமியை குழந்தைகள் நலத்துறையினர் அழைத்து சென்றதாக கூறிய அவர்கள், உரிய சான்றிதழ்கள் இல்லாததால் சிறுமியை மீட்க முடியாமல் தவித்து வருவதாக கூறினர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே