தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அரங்கேறிய சோகம்... மூடப்படாத செப்டிங் டேங்க் - 6 வயது சிறுவன் விழுந்து பலி

தந்தி டிவி

செங்கல்பட்டு அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.

இவர் தன் 6 வயது மகன் பிரதீஷ் என்பவருடன் வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.

அங்கு, சிறுவன் பிரதீஷ் திடீரென காணாமல் போனதையடுத்து அனைவரும் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த செப்டிங் டேங்க்கினுள் குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலே சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் ஊராட்சி மன்ற செயலர் உட்பட இருவரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

இதனிடையே ஊராட்சி தலைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை