தற்போதைய செய்திகள்

மீன்பிடிக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்..நீரில் மூழ்கிய பள்ளி மாணவர்கள்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் ​நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான தெய்வசிகாமணி என்பவரின் 14 வயது மகன் தினேஷ், அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதாகும் இன்பராஜ் ஆகிய இருவரும், அங்குள்ள ஏரியில் மீன்பிடிக்கச் சென்றனர். எதிர்பாராதவிதமாக இன்பராஜ் நீரில் மூழ்கியதால் அதிர்ச்சியடைந்த தினேஷ், காப்பாற்ற குதித்தபோது இருவரும் நீரில் மூழ்கினர். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை