தற்போதைய செய்திகள்

6 துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- நெருங்கும் புயல்

தந்தி டிவி

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெற்று, நாளை காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதி நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு உட்படலாம் என்பதை குறிக்க 4ம் எண் எச்சரிக்கை கூண்டும், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்க வாய்ப்புள்ளதால், கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கும் வகையில் 5ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. இதே போல திடீர் காற்றோடு கூடிய மழை பெய்யலாம் என்பதை குறிக்க எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, தூத்துக்குடி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை