தற்போதைய செய்திகள்

6 துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- நெருங்கும் புயல்

தந்தி டிவி

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெற்று, நாளை காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதி நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு உட்படலாம் என்பதை குறிக்க 4ம் எண் எச்சரிக்கை கூண்டும், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்க வாய்ப்புள்ளதால், கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கும் வகையில் 5ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. இதே போல திடீர் காற்றோடு கூடிய மழை பெய்யலாம் என்பதை குறிக்க எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, தூத்துக்குடி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்