டைட்டானிக் கப்பலின் மிச்சங்களை பார்வையிட, சுற்றுலா சென்ற டைட்டன் நீர் மூழ்கி கப்பல் விபத்திற்குள்ளானது. இதில் அந்தக் கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது? யார் காரணம்? என்பது போன்ற தகவல்களை கண்டறிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதேபோல், அமெரிக்க கடலோர காவல்படையும், இந்த விபத்து தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளது.