தற்போதைய செய்திகள்

டேங்க் ஆபரேட்டர் பணிக்கு ரூ.5 லட்சம் கேட்ட ஊ.ம.தலைவர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

தந்தி டிவி
• திருவண்ணாமலை அருகே, மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர் பணிக்கு 5 லட்சம் கேட்டு, முதற்கட்டமாக 25 ஆயிரம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். • எடப்பிறையில் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜீவாமூர்த்தி என்பவர் பதவி வகித்து வருகிறார். • அந்த கிராமத்தில் மேல்நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த கோவிந்தசாமி, கடந்த 4 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். • அந்த பணியை அவரது மனைவி பராசக்திக்கு வழங்குவதற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாமூர்த்தி 5 லட்சம் பேரம் பேசி பணம் தரும்படி நெருக்கடி அளித்துள்ளார். • இது குறித்து பராசக்தி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். • அவர்கள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் பணத்தை, போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக்கூடத்தில் அமர்ந்திருந்த ஜீவாமூர்த்தியிடம் கொடுத்துள்ளார். • அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர். • அவரிடம் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைத்தினர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM