தற்போதைய செய்திகள்

"விளையாட சென்ற சிறுவன் குளத்தில் செத்து மிதந்த சோகம்“ - போலீசார் தீவிர விசாரணை | திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• மீஞ்சூர் அடுத்த வாயலூர் குப்பத்தை சேர்ந்த குமார், வருவாய்த்துறையில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். • இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். • 10 வயது மகன் மோனீஷ், அருகில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். • சைக்கிளுக்கு பஞ்சர் போட வேண்டுமென கூறிவிட்டு சென்ற மோனீஷ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. • இதையடுத்து, தனது மகனை காணவில்லை என அவரது தந்தை, காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். • இந்நிலையில், வாயலூரில் உள்ள குளத்தில் சிறுவன் மோனீஷ் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். • விளையாட சென்ற சிறுவன் குளத்தில் தவறி விழுந்தானா? குளிக்க சென்றபோது குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தானா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"