தற்போதைய செய்திகள்

மயானத்தில் புதைத்த உடலை தோண்டி எடுத்த போலீசார்... காரணம் என்ன? - திருப்பூரில் அதிர்ச்சி

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வீட்டில் தூக்கு போட்டு இறந்த நபரை காவல் துறையினருக்கு தெரியாமல் குடும்பத்தினர் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்தவர் முருகன். • முருகனுக்கு பக்கவாதம் ஏற்பட்ட காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. • இந்நிலையில் சனிக்கிழமை குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த முருகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறைக்கு கூறாமல், குடும்பத்தினர் முருகனின் உடலை மாணிக்காபுரம் சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். • தகவலறிந்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். • இதனையடுத்து போலீசார் மாணிக்காபுரம் சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்த முருகனின் உடலை வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், பல்லடம் டி.எஸ்.பி சௌமியா தலைமையில் தோண்டி எடுத்தனர். • பின்னர், அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு