• விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இடி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
• வரகுப்பட்டு கிராமத்தில் வயல்வெளிக்கு சென்றிருந்த அஞ்சலி என்பவர் இடித்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
• இதேபோல், திண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி நீலா ஆகியோர் இடி தாக்கி காயமடைந்த நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
• மேலும், பூதேரி பகுதியில் இடி விழுந்து தென்னை மரம் தீப்பற்றி எரிய விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.