தற்போதைய செய்திகள்

புலியை சமைத்து ஊரே பங்கு போட்டு சாப்பிட்ட கொடூரம்... அதிர்ந்து போன வனத்துறை...

தந்தி டிவி
• ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த புலியை சமைத்து சாப்பிட்டவர்களை கைது செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். • ஆக்கபள்ளம் கிராம விவசாயிகள் விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுந்து சேதம் விளைவிக்காமல் தவிர்ப்பதற்காக சட்டத்துக்கு புறம்பான வகையில் மின்சார வேலி அமைத்துள்ளனர். • கடந்த 4 நாட்களுக்கு முன் ஆக்கபள்ளம் அருகே வனப்பகுதியில் பெண் புலி ஒன்றின் கால் தடத்தை கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் கேமராக்களை பொருத்தி இருந்தனர். • ஆனால் அதற்கு முன்னதாகவே அந்த புலி மின்சாரம் தாக்கி இறந்து கிராம மக்களுக்கு உணவாகி விட்டது. • புலியின் கறியை பங்கு போடுவதில் ஆக்கப்பள்ளம் கிராம மக்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு இந்த விஷயம் வனத்துறையினருக்கு தெரிய வந்தது. • அக்கிராமத்திற்கு நேற்று சென்ற வனத்துறையினர் புலி மாமிசம் சாப்பிட்டவர்கள் என்று கருதப்படும் சிலரை வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். • இதனால் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. • இந்நிலையில், 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்கள் புலிக்கறி சாப்பிட்டதை ஒப்புக் கொண்டனர். • மேலும் புலி தோலை அங்குள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் வீசிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். • இதன் அடிப்படையில் புலித்தோலை மீட்க வனத்துறையினர் முடிவு செய்துள்ள நிலையில், புலி மாமிசம் சாப்பிட்ட மேலும் பலர் அந்த கிராமத்தில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அவர்களையும் கைது செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்