தற்போதைய செய்திகள்

சிப்ஸ் தயாரிக்கும் மெஷினை ஆன் செய்ததும் தூக்கி எறியப்பட்ட ஊழியர் - மருத்துவமனைக்கு போகும் வழியில் பிரிந்த உயிர்

தந்தி டிவி
• மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • திருவொற்றியூர், ஒத்தவாடை தெருவில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனம் இயங்கி வருகிறது. • இங்கு வேலை பார்க்கும் 21 வயது இளைஞரான ரவி, வழக்கம் போல் சிப்ஸ் தயாரிக்கும் மெஷினை ஆன் செய்துள்ளார். • அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், ரவி தூக்கி எறியப்பட்டார். • இதனையடுத்து உடனே அவரை மீட்ட சக ஊழியர்கள் முதலில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். • இது குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை