தற்போதைய செய்திகள்

விலகி விலகி சென்ற 12ம் வகுப்பு மாணவி.. தலையில் அரிவாளால் தாக்கிய இளைஞர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. • இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு இறுதித்தேர்வை எழுதிவிட்டு வந்த அந்த மாணவியிடம், சோலையப்பன் பேச முயன்றுள்ளார். • அப்போது அந்த மாணவி அவரிடம் பேசாமல் விலகி செல்லவே ஆத்திரமடைந்த சோலையப்பன், அரிவாளால் மாணவியின் தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார். • இதில் மாணவி பலத்த காயமடைந்த நிலையில், தப்பி செல்ல முயன்ற சோலையப்பனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். • தாக்குதலுக்கு ஆளான மாணவி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"