தற்போதைய செய்திகள்

தனியாக இருந்த பாட்டிக்கு நேர்ந்த கொடுமை சிக்கிய இளைஞர்கள் - கட்டுப் போட்டு கவனித்த போலீஸ்

தந்தி டிவி
• தூத்துக்குடி அருகே தனியாக இருந்த மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டி, கத்தியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். • தூத்துக்குடி மாவட்டம், கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி காந்திமதி தனியாக வசித்து வருகிறார். • நேற்று அதிகாலை, காந்திமதியின் வீட்டிற்குச் சென்ற, அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கர நயினார், நெல்லையப்பன் ஆகிய இருவரும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். • மூதாட்டி பணம் கொடுக்காததால், அவரை கத்தியால் தாக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். • சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். • காந்திமதியின் மகன் அளித்த புகாரின்பேரில், தட்டப்பாறை போலீசார், இளைஞர்கள் இருவரையும் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். • காவல் நிலைய கழிப்பறையில் இருவரும் வழுக்கி விழுந்ததில், காயம் ஏற்பட்டதில், மாவு கட்டு போடப்பட்டுள்ளது. • இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்