தற்போதைய செய்திகள்

சேட்டை செய்த 3 வயது குழந்தை...குச்சியால் அடித்த தாய்...சுய நினைவை இழந்து குழந்தை பலி - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், தாய் சரமாரியாக தாக்கியதில், சுய நினைவை இழந்த 3 வயது ஆண் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. • திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சதீஷ் - செல்வி தம்பதிக்கு, மணிகண்டன், சஞ்சனா, கிஷோர் என 3 குழந்தைகள் உள்ளன. • 3 வயது குழந்தையான கிஷோர், வீட்டில் சேட்டை செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த தாய் செல்வி, குடிந்தையை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. • இதில் சுய நினைவின்றி கீழே விழுந்த குழந்தையை, அருகில் உள்ள மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். • எனினும், சிகிச்சைப் பலனின்றி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"