தற்போதைய செய்திகள்

ஒன்றாக தூக்கில் தொங்கிய மகன், மருமகள்... அதிர்ச்சியில் உறைந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் விரக்தியடைந்த கணவன், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்குன்றம் அருகே நடந்திருக்கிறது. • சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பகத்சிங் தனது மகன் முருகேசன், மருமகள் ஜெயந்தி மற்றும் பேரக்குழந்தைகளோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். • தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முருகேசன் ஆன்லைன் வர்த்தகமும் செய்து வந்ததாக தெரிகிறது. • இவர்களுக்கு சொந்தமாக செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டை பகுதியில் வீடு ஒன்றும் உள்ள நிலையில் அவ்வப்போது அங்கு வந்து தங்குவதும் வழக்கம். • அதன்படி சம்பவத்தன்று தன் மனைவி ஜெயந்தியுடன் வந்த முருகேசனை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரில் சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். • ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதால் முருகேசன் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். • இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரியவந்திருக்கும் சூழலில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்