தற்போதைய செய்திகள்

தங்க நகைகள் கொள்ளையடிக்க சென்ற கும்பல்... தங்கத்திற்கு பதிலாக பித்தளை இருந்ததால் ஆத்திரம்... கோபத்தில் மூதாட்டியை அடித்துக் கொன்ற கொடூரம்

தந்தி டிவி
• கொள்ளையடிக்க சென்ற இடத்தில் தங்கத்திற்கு பதிலாக பித்தளை இருந்ததால் கோபமடைந்த கொள்ளையர்கள் மூதாட்டியை அடித்துக் கொன்ற சம்பவம் திருத்தணி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. • திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். 82 வயதான இவர், தனியாக வசித்து வந்தார். • இவரின் மகன் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். • தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று வந்த வள்ளியம்மாள், இன்று காலை ரத்த வெள்ளத்தில் வீட்டின் உள்ளே சடலமாக கிடந்தார். • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வள்ளியம்மாள் கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. • மூதாட்டி தனியாக வசிப்பதை நோட்டமிட்ட கும்பல் கொள்ளையடிக்க வந்திருக்கிறது. • ஆனால் கடந்த மாதம் தன் வசமிருந்த நகைகள் அனைத்தையும் வள்ளியம்மாள் தன் மகனிடம் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். • திருட வந்த இடத்தில் ஏமாந்து போன அந்த கும்பல் மூதாட்டியை கொடூரமாக கொன்றது உறுதியான நிலையில் அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்