தற்போதைய செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு அண்ணன் பலி, தங்கைக்கு தீவிர சிகிச்சை; பீதியில் திருவள்ளூர் மக்கள்

தந்தி டிவி
• திருத்தணி அருகே காய்ச்சலுக்கு உயிரிழந்த சிறுவனின் கிராமத்தில், சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். • திருவள்ளூர் மாவட்டம் காசிநாதபுரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். • இவரது 7 வயது மகன் தேவகுமார், காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த10 ம் தேதி உயிரிழந்தார். • இந்தநிலையில் தேவகுமாரின் தங்கைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. • இதனையடுத்து அவருக்கு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. • இதன் எதிரொலியாக காசிநாதபுரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. • வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ