தற்போதைய செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு அண்ணன் பலி, தங்கைக்கு தீவிர சிகிச்சை; பீதியில் திருவள்ளூர் மக்கள்

தந்தி டிவி
• திருத்தணி அருகே காய்ச்சலுக்கு உயிரிழந்த சிறுவனின் கிராமத்தில், சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். • திருவள்ளூர் மாவட்டம் காசிநாதபுரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். • இவரது 7 வயது மகன் தேவகுமார், காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த10 ம் தேதி உயிரிழந்தார். • இந்தநிலையில் தேவகுமாரின் தங்கைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. • இதனையடுத்து அவருக்கு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. • இதன் எதிரொலியாக காசிநாதபுரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. • வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’