தற்போதைய செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் பலியான சம்பவம் - உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

தந்தி டிவி

கடந்த மாதம் 21ம் தேதி, போதைக்கு அடிமையான 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சோழவரம் அடுத்த, அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டான்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பள்ளி மாணவர் மனோஜ்குமார், கழிப்பறையில் மயங்கி விழுந்தார்.

அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் கொண்டு செல்லும் போதே இறந்து விட்டார்.

தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாணவனின் தாய் போலீசில் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில் சிறுவனை கழிவறையில் வைத்து தாக்கியதில், சிறுவன் மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்ததையடுத்து.

போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"