நாமக்கல் மாவட்டம் பட்டணம் கிராமத்தில், மர்ம நபர் ஒருவர் தெரு விளக்குகளை மட்டும் திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டணம் கிராமம், தேரடி தெரு பகுதியில், மர்ம நபர் ஒருவர் பேரூராட்சிக்கு சம்மந்தபட்ட மின் விளக்குகளை மட்டும் கழட்டி எடுத்து சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.