தற்போதைய செய்திகள்

கல்லை வாயில் வைத்து கன்னத்தை தேய்த்தனர்"- சூர்யா, பிறழ்சாட்சியான நபர்..!

தந்தி டிவி

அம்பையில், ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுப்பப்பட்ட புகாரை அடுத்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்த சூர்யா, சார் ஆட்சியர் விசாரணைக்குப் பின், போலீசார் தாக்கி பல் உடையவில்லை, கீழே விழுந்ததால்தான் பல் உடைந்ததாக பிறழ்சாட்சியாக மாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர், சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, தனது பேரன் மிரட்டப்பட்டதால் பொய் சொன்னதாகவும், போலீசார் தாக்கியதாலேயே அவரது பல் உடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் ஆஜராகி, சூர்யா தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா