தற்போதைய செய்திகள்

கல்லை வாயில் வைத்து கன்னத்தை தேய்த்தனர்"- சூர்யா, பிறழ்சாட்சியான நபர்..!

தந்தி டிவி

அம்பையில், ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுப்பப்பட்ட புகாரை அடுத்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்த சூர்யா, சார் ஆட்சியர் விசாரணைக்குப் பின், போலீசார் தாக்கி பல் உடையவில்லை, கீழே விழுந்ததால்தான் பல் உடைந்ததாக பிறழ்சாட்சியாக மாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர், சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, தனது பேரன் மிரட்டப்பட்டதால் பொய் சொன்னதாகவும், போலீசார் தாக்கியதாலேயே அவரது பல் உடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் ஆஜராகி, சூர்யா தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை