தற்போதைய செய்திகள்

"இவர்கள் இருவர் ஊழல் செய்பவர்கள், தேசவிரோதிகள்.." - காங். தலைமை அலுவலகம் முன் ஒட்டப்பட்ட போஸ்டர்

தந்தி டிவி

ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர்களை ஊழல் செய்பவர்கள் எனக் குறிப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவும், ஹவாலா பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரையும் ஊழல் செய்பவர்கள், தேசவிரோதிகள் எனக் குறிப்பிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பிற அலுவலகங்களுக்கு வெளியேயும் இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?